Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 15, 2014

    டி.சி., பெற விரும்பும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூல்

    தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில், சேர்க்க விரும்பும் பெற்றோரிடம், அடுத்த ஆண்டு கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளிகள் நெருக்கடி தருகின்றன. தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், கல்வித் தரம் சரியில்லை என கருதும் பெற்றோர், வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கான முயற்சிகள், கல்வியாண்டு துவங்கும் முன் மேற்கொள்ளப்படுகிறது.


    வரும் கல்வியாண்டில், வேறு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்துள்ள பெற்றோர், தற்போது படிக்கும் பள்ளிகளிலிருந்து, டி.சி., எனப்படும் இடமாறுதல் சான்றிதழ் வாங்க முயற்சித்து வருகின்றனர்.

    "திடீரென டி.சி., வேண்டுமென்றால், அடுத்த ஆண்டின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும்" என தனியார் பள்ளிகள், பெற்றோர்களை நிர்பந்திக்கின்றன. ஓர் ஆண்டிற்கான முழு கட்டணத்தையோ அல்லது 50 சதவீத கட்டணத்தையோ செலுத்துமாறு, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர், பிளஸ் 1 படிக்க, வேறு பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.

    "மே 23ல், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பிறகே சீட் கொடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும்" என, புதிதாக மாணவர்களை சேர்க்க உள்ள பள்ளிகள் கூறுகின்றன. ஆனால், "மே முதல் வாரத்திற்குள், பிளஸ் 1 கட்டணம் செலுத்த வேண்டும்" என மாணவர்கள் படித்த பழைய பள்ளிகள் நெருக்கடி தருகின்றன. இதனால், பெற்றோர், பெரும் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

    கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: &'டி.சி., வாங்கும்போது, கண்டிப்பாக அடுத்த ஆண்டு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதை மீறும் பள்ளிகள் குறித்து, கல்வித் துறையிடம் பெற்றோர் புகார் அளிக்கலாம்.

    வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும்; கூடுதல் கட்டணம் எதையும் கேட்கக் கூடாது. அவ்வாறு எந்த பள்ளிகளாவது கேட்டால், கல்வித்துறைக்கு, பெற்றோர் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: