Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 18, 2014

    அறிவியலில் தவறான கேள்விகள்: 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

    பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்காக அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


    கடந்த 7அ தேதி பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் பகுதியில் கேள்வி எண் 14ல், "ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில் அந்த ஆடியின் வகை என்ன..." என, கேட்கப்பட்டது. இதற்கு, "குவிலென்ஸ்" என்பது விடை. ஆனால், "குழிலென்ஸ்" என்ற வேறொரு விடையும் உள்ளது. இந்த கேள்விக்கு எந்த பதிலை எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

     இரு மதிப்பெண் பகுதி தமிழ் வழி கேள்வி எண் 29ல் "வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை..." என்ற கேள்விக்கு ஆங்கில வழி கேள்வித்தாளில், "பயோ - பியூல்" என, கேட்டு தமிழ்வழி கேள்வித்தாளில் "உயிரி எரிபொருள்" என, கேட்காமல் பொதுவாக கேட்டுவிட்டனர்.

    இதனால், மாணவர்கள், "பெட்ரோல், டீசல்" என, விடை எழுதினர். இதனால், மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், இந்த கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு விட்டுள்ளதாக பாட ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

    No comments: