Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 2, 2014

    வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு

    வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதே சமயத்தில், வருமானவரி விலக்கு பெறுவதற்கு மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60 ஆக குறைத்துள்ளது. மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உருவாக்கி உள்ள, திருத்தப்பட்ட நேரடி வரிகள் சட்ட வரைவு மசோதா, மத்திய நிதி அமைச்சக இணையதளத்தில்நேற்று வெளியிடப்பட்டது.
    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2லட்சமாகவே நீடிக்கும். அதை ரூ.3 லட்சமாக உயர்த்த முடியாது. அதுபோல், இதர வருமானவரி விகிதங்களையும் மாற்றி அமைக்க முடியாது.இந்த சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டால், உத்தேசமாக, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் உடைய தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக்குடும்பங்கள், ‘சூப்பர் பணக்காரர்கள்’ ஆக கருதப்படுவார்கள். அவர்களுக்கு 35 சதவீத வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட சொத்துடைய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய சட்டங்களுக்குகட்டுப்பட வேண்டி இருக்கும்.பங்கு பரிவர்த்தனை வரியை கைவிட வேண்டும் என்ற சிபாரிசையும் ஏற்க முடியாது.அதே சமயத்தில், மூத்த குடிமக்களுக்கான வருமானவரி விலக்கு சலுகையை பெறுவதற்கான வயது வரம்பு, 65–ல் இருந்து 60 ஆக குறைக்கப்படுகிறது. இதன்மூலம், அதிகமான மூத்த குடிமக்கள் வருமானவரி சலுகையை பெறுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த திருத்தப்பட்ட நேரடி வரிகள் சட்ட வரைவு மசோதா மீது, தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments: