Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 11, 2014

    விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை


    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம், மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, தேனி மேரி மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.
    இதே போல், சின்னமனூர் காயத்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.

    விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும். உயிரியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை 10 விடைத்தாள்களும், மாலை 10 விடைத்தாள்களும் திருத்த வழங்க வேண்டும். மற்ற பாடங்களுக்கு, காலை 8 விடைத்தாள்களும், மாலை 8 விடைத்தாள்களும் வழங்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீடு வழங்க வேண்டும்.
    கணிப்பொறி பாடத்திற்கு உள்ளது போல், அனைத்து பாடங்களுக்கும் 75 ஒரு மதிப்பெண் வினா வழங்கி, ஒளியிழை மதிப்பீடு கணிப்பான் அட்டை வழங்க வேண்டும். உயிர் தாவரவியல், உயிர் விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி தேர்வு நடத்த, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    No comments: