Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 16, 2014

    பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: ஒப்புதல் அளிப்பதில் அரசு கால தாமதம்

    பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக அரசு கால தாமதம் செய்து வருகிறது.

    வரும் 2015-16ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1க்கும், 2016 - 17ல் பிளஸ் 2வுக்கும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், பாட வாரியான வல்லுனர் குழு மூலம் 25 பாட தலைப்புகளில் வரைவு பாடத் திட்டத்தை தயாரித்தது.

    பின், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்து வரைவு பாடதிட்டத்தை இறுதி செய்தது. இதற்கு, தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு கோப்பு அனுப்பி பல மாதங்கள் ஆகின்றன. இதுவரை, அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. முதல்வர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே அரசின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டதாக கல்வித்துறை கூறுகிறது.

    இது குறித்து, துறை வட்டாரம் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தால் தான் அடுத்த கட்டமாக பாட தலைப்பு வாரியாக விரிவாக பாடம் எழுத முடியும். இந்த பணி முடியவே ஓர் ஆண்டை தாண்டிவிடும். பின், எழுதிய பாடங்களை ஒன்றுக்கு பல முறை சரிபார்த்து பாட புத்தகங்களை அச்சிட வேண்டும். இந்த பணிகளுக்கு அதிக கால அவகாசம் தேவைப்படும். எனவே, புதிய பாடத்திட்டங்களுக்கு விரைந்து அனுமதி கிடைத்தால் தான் அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடக்கும். இவ்வாறு, அவ்வட்டாரம் தெரிவித்தது.

    பத்தாம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி முறை திட்டம் கொண்டு வரும் விவகாரத்தில் கடைசிவரை அரசு எவ்வித முடிவும் எடுக்காததால் வரும் கல்வி ஆண்டில் பழைய முறையே தொடர உள்ளது. இதே நிலை பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்களுக்கும் ஏற்பட்டால் பெரிய குழப்பம் ஏற்படும்.

    No comments: