Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 14, 2014

    வணிகவியல் தேர்வு எளிது: மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

    நாமக்கல்: பிளஸ் 2 வணிகவியல் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக, தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால், இந்தப் பாடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதுடன், சதம் வாங்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் உயரும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.


    பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் நடக்கிறது. தேர்வில் எவ்வித குளறுபடிகளும் நடக்கக் கூடாது என்பதற்காக, தேர்வுத்துறை இயக்குனரகம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து தேர்வை நடத்தி வருகிறது.

    அதேபோல் வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் பாதுகாப்பு, தேர்வு எழுதும் முறைகள், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்டவைக்கு, முக்கியத்துவம் கொடுத்து கண்காணித்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று வணிகவியல், புவியியல், மனையியல் தேர்வுகள் நடந்தது.

    நாமக்கல் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்த தேர்வர்களிடம் கேட்டபோது, "வணிகவியல் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்தது. பாட திட்டங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன. அதேபோல், வினாத்தாளில் எவ்வித குளறுபடியும் இல்லை" என்றனர்.

    No comments: