Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 24, 2014

    மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்துள்ளது.


    மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, மே 4 முதல், 20 வரை, அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள்
    வழங்கப்பட்டன; 2.34 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. ஜூன் இறுதி முதல், ஜூலை இறுதி வரை நடந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 1.5 லட்சம் இடங்கள் நிரம்பின; 50 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு சேர ஆளில்லை. வரும், 2014 15 கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கு, மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, விண்ணப்பம் வழங்க முடிவு செய்திருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்தது. "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 24ல் துவங்கி, 15 நாளில் முடிய உள்ளது. பாட வாரியாக, மதிப்பெண் தொகுப்பு மற்றும் தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், அடுத்த, இரண்டு வாரம் வரை, "டேட்டா சென்டரில்' நடக்கும். எப்படியும், மே மாதம், 7 தேதிக்குள், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மே மாதம், முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பம் வழங்குவது சரியாக இருக்கும் என, பல்கலை கருதுகிறது.

    No comments: