Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 24, 2014

    மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்

    .மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர். விடைத்தாள் அமைப்பு உட்பட தேர்வுத் துறையில், இந்தாண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, உயிரியல்
    தேர்வில், விலங்கியல், தாவரவியல் என இரு பகுதிகளுக்கும் தலா 26 பக்கம் கொண்டதாக விடைத்தாள் தயாரிக்கப்பட்டன. தேர்வின்போது, இந்த இரண்டு விடைத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதற்குரிய விடைத்தாளில் தான் விடைகள் எழுத வேண்டும். ஏனென்றால், விடைத்தாள் திருத்தும்போது, விலங்கியல், தாவரவியல் பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் திருத்தி, மதிப்பெண் வழங்குவர். இந்த முறையை, தேர்வு அறையில் மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி விடைத்தாள்கள் வழங்க, தேர்வுத் துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மதுரையில் உள்ள ஒரு மையத்தில், விலங்கியல் பகுதி விடைத்தாளில் விடை எழுதி முடித்த மாணவிகள் சிலர், தொடர்ந்து தாவரவியல் கேள்விகளுக்கான விடையும் எழுதிவிட்டனர். இது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது. விடைத்தாள்களை இரண்டு ஆசிரியர்கள் திருத்துவதால், விலங்கியல் பகுதியில் எழுதப்பட்ட தாவரவியல் விடைக்கான மதிப்பெண் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவிகள் உள்ளனர். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று, "கல்வி அதிகாரிகளுக்கு முறையாக இப்பிரச்னையை தெரிவித்து, விடைத்தாள் திருத்தும் போது சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் இருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.

    No comments: