Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 10, 2013

    தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

    "முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
    தமிழகத்தில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, போட்டித் தேர்வு, ஜூலை மாதம் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மே, 31ம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 2 லட்சம் பேர் வரும், 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வு எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்கும்போதே, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் முன்அனுபவம் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றி வரும் பள்ளியில், தங்களது வருகைப்பதிவேடு, வகுப்பு எடுத்த கால அட்டவணை ஆகியவற்றின் நகலுடன், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் கையெழுத்து மற்றும் மெட்ரிக்குலேசன் ஆய்வாளர் கையெழுத்து, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கையெழுத்து பெற்று, இணைத்து வழங்க வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.

    இந்த புது நிபந்தனையால், விண்ணப்பத்தாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: வழக்கமாக, அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு செய்யப்பட்ட பின் தான், வருகைப்பதிவேடு நகல், கால அட்டவணை, சம்பளப் பட்டியல், பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்து போன்றவை கேட்பர். நடைமுறை சிக்கல் அவற்றை சரிபார்த்த பின், "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவர். அதன்பின், ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவர். முன்கூட்டியே இவற்றைக் கேட்பதால், நடைமுறை சிக்கல் உருவாகும் நிலை உள்ளது. முன்அனுபவத்தின் அடிப்படையில், ஓராண்டுக்கு, 1, மூன்று ஆண்டுக்கு, 2, ஐந்து ஆண்டுக்கு, 3, 10 ஆண்டுக்கு, 4 என, "வெயிட்டேஜ்' மதிப்பெண், வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பதில், காலதாமதத்தை தடுக்க, டி.ஆர்.பி., இந்த புதிய நிபந்தனையை விதித்துள்ளது நல்ல விஷயம் தான். ஆனால், தனியார் பள்ளியில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தும், ஒருவேளை தேர்ச்சி பெறவில்லையென்றால், அந்த தனியார் பள்ளியில், மீண்டும் அந்த ஆசிரியருக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுமா, என்பது சந்தேகம்.

    அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் முயற்சிக்கிறார் என்பது தெரிந்தால், தனியார் பள்ளி நிர்வாகம், வேண்டுமென்றே சான்றுகளை வழங்காமல் இழுத்தடிக்கும். இது போன்று, ஏற்கனவே தமிழகத்தில், பல பள்ளிகளில் நடந்து ள்ளது. தற்போது சில பள்ளிகளில், வருகைப்பதிவேடு சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்துகின்றன. குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால், இந்த சான்றுகளை தயாரிப்பதில், பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. மாவட்டம் விட்டு, மாவட்டம் வேலை பார்ப்பவராக இருந்தால், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், பள்ளியிலும் இதற்கான சான்றிதழ்களை வாங்கி வரவேண்டும். குறையும் இதனால், சிலர் விண்ணப்பிக்க தயங்குகின்றனர். எனவே, இந்த புது நிபந்தனையை டி.ஆர்.பி., தளர்த்தினால், பயனுள்ளதாக இருக்கும். இல்லை யென்றால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். இவ்வாறு, அவர் கூறினார். தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

    No comments: