Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 27, 2013

    அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் 2 நாள்விடுமுறை அறிவிப்பு

    பொள்ளாச்சியில் அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியதால் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த
    கனமழையில், ஊஞ்சவேலாம்பட்டி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில், மேல்கூரை பகுதியிலிருந்து மழைநீர் ஒழுகி வகுப்பரை முழுவதும் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை பள்ளியை திறந்த ஆசிரியர்கள் வகுப்பரையில் தண்ணீர் தேங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடன், பள்ளி மாணவர்களை அருகே உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில், தற்காலிகமாக அமர்த்தி ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
    அதுபோல், தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி ஏபிடிரோடு நகர்வழி நடுநிலை பள்ளியிலும் வகுப்பறை மற்றும் வளாக பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மாணவர்கள் படிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த தெற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குருராகவேந்திரா, பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
    ஒன்றிய பள்ளிகளில் பராமரிப்பு சரியாக இல்லாததால் தண்ணீர் தேக்கமடைவதையடுத்து மாணவர்கள் படிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இதையடுத்து, கள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி மற்றும் ஏபிடிரோடு நகர்வழி நடுநிலை பள்ளிகளுக்கு இன்றும்(27ம் தேதி), நாளையும்(28ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக, கூடுதல் உதவி துவக்க கல்வி அலுவலர் கண்ணபிரான் தெரிவித்தார்.

    No comments: