Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 26, 2013

    பி.எட்., பயிற்சிக்காக ஆசிரியர்கள் ஒரு மாதம் விடுப்பு : ஊராட்சி, நகராட்சி பள்ளி மாணவர்கள் பாதிப்பு - நாளிதழ் செய்தி

    ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் பி.எட்., பயிற்சிக்காக, விடுப்பு எடுத்து செல்வதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
    ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், கிராமப்புற பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது.
    இப்பகுதியில், பணியாற்றும் பட்டய பயிற்சி முடித்த ஆசிரியர்கள், பணியில் இருந்து கொண்டே, பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பயிற்சிக்காக, ஒரு மாதம் விடுப்பு எடுத்து செல்ல் உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பள்ளி வேலை நாட்களில், துறை வாரியான பயிற்சிகளுக்கு, ஆசிரியர்களை அனுப்புவதால், கல்வி தரம் பாதிக்கப்படும் எனக்கூறிய ஆசிரியர்களே, ஒரு மாதம் விடுப்பு எடுத்து செல்வதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் விரும்புகின்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சங்கர் கணேஷ் கூறுகையில்,"" பி.எட்., பயிலும் ஆசிரியர்களை, அவர்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளியிலேயே, பயிற்சி பெற அனுமதிக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இவ்வாறு செய்தால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்,'' என்றார்.
    மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராமச்சந்திரன் கூறுகையில்,"" மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, நடுநிலை பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு, அதே பள்ளியில் பி.எட்.,பயிற்சியும், ஆரம்ப பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயிற்சி வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

    No comments: