Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 30, 2013

    பாலியல் கொடுமை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் எண்

    பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீப காலமாக, பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன.
    இதை தடுப்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. சைல்டு ஹெல்ப் லைன் என்ற பெயரில் 1098 என்ற தொடர்பு எண் கொடுக்கப்பட்டது. ஹெல்ப்லைன் இருப்பது குறித்து மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் விதத்தில், முதல் கட்டமாக பிளஸ் 1 பாடப்புத்தகங்களில் நடப்பு கல்வியாண்டில் இந்த எண் அச்சிடப்பட்டுள்ளது. இது கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண் என்பதால், எந்த தொலைபேசியில் இருந்தும் புகார் அளிக்கலாம். இதுகுறித்து பாடநூல் கழக உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்தாண்டு பிளஸ் 1 புத்தகங்களின் அட்டையில், ஹெல்ப்லைன் எண் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து, அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இந்த எண் அச்சிடப்படும்’’ என்றார். பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக, இந்த முயற்சியை எடுத்துள்ள அரசு, இதில் வரும் புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பெற்றோர் கூறுகின்றனர்.

    No comments: