Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 27, 2013

    மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளியில் கட்டண வசூல்?

    ஓ.சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், பெற்றோர்கள், குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பள்ளிபாளையம் அருகே, ஓ.சௌதாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது, பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    மாணவ சேர்க்கைக்கு பள்ளியில், 1,000 முதல், 3,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அவர் முறையான பதில் அளிக்கவில்லை.

    தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால், மக்கள், குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, "பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. முறையாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது," என்றார்.

    No comments: