Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 25, 2013

    பள்ளி மாணவர்களுக்கு கணித அறிவாற்றல் குறைவு

    ஐந்தாம் வகுப்பு பயிலும் 46.5 சதவிகித மாணவர்களுக்குக் கணித அறிவாற்றல் மிகவும் குறைவாக உள்ளது என்று இந்திய அளவில் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது,
    என ஆவடி கனரகத் தொழிற்சாலை உதவி கணக்குத் தணிக்கையாளர் ஆர்.அருளானந்தன் கூறினார்.சென்னையை அடுத்த பனப்பாக்கம் ஸ்ரீகிருஷ்ணா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் 4-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கும் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 11.7 சதவீதமாக உள்ளது. கடந்த 2004-ல் தனிநபருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.888 தற்போது ரூ.2 ஆயிரத்து 985 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    உலகில் அதிக இளைய தலைமுறையினரைக் கொண்ட நாடாகத் திகழ்ந்து வரும் இந்தியாவுக்கு, இளைய தலைமுறையினரை கல்வி அறிவாற்றல் மிக்கவர்களாக மேம்படுத்தும் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அதை திறம்பட செயல்படுத்த ஆசிரியர் சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும்.

    அண்மையில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 5-ஆம் வகுப்பு பயிலும் 46.5 சதவிகித மாணவர்களுக்கு எளிய கூட்டல், கழித்தல் கணக்குக் கூட தெரியவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்குச் சரியாகக் கற்பிக்கப்படவில்லை. பள்ளி ஆசிரியர்களின் அலட்சியமும், கவனக்குறைவும் தான் மாணவர்களின் கணித அறிவாற்றல் குறைவுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

    விழாவில் 181 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் ஆர்.விவேகானந்தன், முதல்வர் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    No comments: