Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 14, 2013

    முதுகலை ஆசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி நாள்

    முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (14ம் தேதி) கடைசி நாளாகும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

    தமிழகத்தில் 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அரசு முடிவு செய்தது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் கடந்த 31ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஆரம்பமானது.

    விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க இன்று (14ம் தேதி) கடைசி நாளாகும். இதனால் கடந்த ஒரு சில நாட்களாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முதுகலை பட்டதாரிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையானது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14ம் தேதி) கடைசி நாள் என்பதால் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான கல்வித் துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 21ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வுக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

    இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    No comments: