Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 7, 2013

    அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

    சென்னை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகளின், மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,430 ஆக உயர்ந்துள்ளது.

    நடப்பு, 2013 - 14ம் கல்வியாண்டில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போது உள்ள, முறையே, 165, 150 இடங்களை, தலா, 250 ஆக உயர்த்திக் கொள்ளவும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், மருத்துவக் கல்வி இயக்ககம், எம்.சி.ஐ.,யிடம் அனுமதி கோரியது.

    இதுதொடர்பாக, கடந்த மார்ச் இறுதியில், எம்.சி.ஐ., குழு, இக்கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, கடந்த மாதம், 29ம் தேதி, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியது.

    தற்போது, சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள, 165 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ளவும், திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 19 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை சேர்த்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின், மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,430 ஆக உயர்ந்துள்ளது.

    இவற்றில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 2,065 இடங்கள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 இடங்கள் என, மொத்தம், 2,903 எம்.பி.பி.எஸ்., இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

    ஒரே ஆண்டில், அரசு மருத்துவக் கல்லூரிகளில், 185 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின், 75 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 100 ஆக உயர்த்திக் கொள்ளவும், எம்.சி.ஐ.,யின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: