Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 7, 2013

    எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., விண்ணப்பம் 10ம் தேதி முதல் வினியோகம்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 10ம் தேதி முதல், 29ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
    தமிழக அரசு அறிவிப்பு: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும், அரசு பொறியியல் கல்லூரி, உதவி பெறும் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மாநிலம் முழுவதும், 42 மையங்களில், வரும், 10ம் தேதி முதல், 29ம் தேதி வரை, வழங்கப்படும்.

    எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும், எஸ்.சி., அருந்ததியர் பிரிவினர், 150க்கான டி.டி.,யும், இதர பிரிவினர், 300 ரூபாய்க்கான, டி.டி.,யையும் கொடுத்து, விண்ணப்பங்களை பெறலாம். "செயலர், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., சேர்க்கை, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை- 641013" என்ற முகவரிக்கு, டி.டி., எடுக்க வேண்டும்.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மேற்கண்ட முகவரிக்கு, அனுப்ப வேண்டும். இதற்கான கலந்தாய்வு, ஜூலை, இரண்டாவது வாரத்தில், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கும்.இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில், கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் கலை கல்லூரியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசாமி அரசு கலை கல்லூரியிலும், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

    No comments: