Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 27, 2017

    அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்! மத்திய அரசு!!

    நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் நான்கு வகையான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அவை ஆர்டினரி, அஃபிசியல், டிப்ளோமேட்டிக் மற்றும் ஜம்போ. ஆர்டினரி பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், அஃபிசியல் பாஸ்போர்ட் அரசாங்க 
    ஊழியர்களுக்கும், டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், ஜம்போ பாஸ்போர்ட் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, பாஸ்போர்ட் இன்றியமையாத ஒரு விஷயமாக உள்ளது.

    குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தை நேற்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார். இதுகுறித்து அவர், ‘ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

    கல்லுாரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்டூடண்ட் கனெக்ட் சேவை மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments: