Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 27, 2017

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது!!!

    தமிழக அரசு பணியில் 2003ம் ஆண்டு-க்கு பின்சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
    சில துறைகளில் மட்டும் பிடித்தம் செய்த தொகை 8 சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.

    இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர், தகவல் அறியும்உரிமைசட்டத்தில் விபரம் கேட்டிருந்தார்.

    இதற்கு நிதித்துறை பொது தகவல் தொகுப்பு மையம் அளித்துள்ள பதில் விபரம்:

    இத்திட்டத்தின் கீழ் பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசு பங்குத்தொகை சேர்த்து அரசு நிர்ணயிக்கும் வட்டியுடன்திரும்ப வழங்கப்படும். இத்திட்ட நிதி, நிரந்தர அரசு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை; தற்காலிக கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டு உள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2015--16 வரை பணியமர்த்தப்பட்டவர்கள், 4 லட்சத்து 54 ஆயிரத்து 999 பேர்.

    புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 2003 ஏப்.,1 முதல் தற்போது வரை (2015--16) பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஐந்தாயிரத்து 114 கோடி 42 லட்சத்து 98 ஆயிரத்து 616 ரூபாய். அரசு பங்கு தொகையாக, அதே அளவு தொகை வரவு வைக்கப் பட்டுள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 222 கோடி 85 லட்சத்து 97 ஆயிரத்து 232.இதுவரை பணி ஓய்வு, இறப்பு போன்றவற்றால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் 1873 பேர்; இவர்களுக்கு தொடர் ஓய்வூதியம் கிடையாது.10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, இருப்பு தொகையில் கடன் வழங்க இயலாது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செல்வம் கூறியதாவது:பத்து ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 25 சதவீதம் கடன் வழங்க, ஏற்கனவே சுற்றறிக்கைவெளியிடப்பட்டது. ஆனால், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டன் வழங்க இயலாது என்றும், எவ்வித அரசாணையும் வெளியிடவில்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கைக்காக குழு அமைக்கப்பட்டு, அரசு அதை கிடப்பில் போட்டுள்ளது. ஓய்வு பெறும் ஊழியருக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப பெறும் வழிமுறைகளை அரசு செய்யவில்லை. இதனால் ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.

    No comments: