Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 9, 2017

    "பான்காரடு" கட்டாயம் : வருமான வரித்துறை

    வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்'என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
    உத்தரவு:இதுகுறித்து, வங்கிகளுக்கு, வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விபரம்: கடந்த,2016, ஏப்ரல், 1ல் இருந்து, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான, நவம்பர், 8 வரையில், வங்கி சேமிப்பு கணக்குகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, ரூபாய் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்.வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களில், பான் எண் குறித்த தகவல்கள் தராதவர்களிடம், அதை, பிப்ரவரி இறுதிக்குள் பெற்று, அனுப்ப வேண்டும். வங்கிகள் மட்டுமின்றி, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட, 2.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகை குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.



    இந்தியாவில், 2020ல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு,பி.ஓ.எஸ்., எனப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' இயந்திரங்கள்தேவையற்றதாகி விடும். ஒவ்வொரு பண பரிவர்த்தனையும், கட்டை விரல் ரேகையை பதிவு செய்வதுடன், 30 வினாடிகளில்முடிந்து விடும். உலகில், 100 கோடி மொபைல் போன்கள், 100 கோடி, 'பயோ மெட்ரிக்' இயந்திரங்கள் உடைய ஒரே நாடு, இந்தியா.

    - அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, 'நிடி ஆயோக்'

    No comments: