Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 2, 2017

    பள்ளி அமைச்சு பணியாளர் பணியிடம் பகிர்ந்தளிக்கப்படுமா?

    கோவையில், 1,800க்கும் மேற்பட்ட, அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு, அலுவலக கோப்புகள் கையாள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவை எட்டியுள்ளது. இதனால், பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


    ஆனால், பள்ளிகளில் உள்ள, அமைச்சு பணியாளர்கள் மட்டும், ஒரே பள்ளியிலே பணிப்புரிகின்றனர். சுண்டப்பாளையம், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு பள்ளிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட, அமைச்சு பணியாளர்கள் பணிப்புரிகின்றனர். 

    இவர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர் இடங்களுக்கு, பணி நிரவல் செய்தால், பணிப்பளுவை சமாளிக்க உதவியாக இருக்கும் என, அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், ’கிணத்துக்கடவு, மதுக்கரை மற்றும் நகர உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்களில், பத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால், நலத்திட்ட பொருட்கள் வினியோகித்தல், தேர்வு சமயங்களில், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.

    எனவே, பள்ளிகளில் கூடுலதாக உள்ள அமைச்சு பணியாளர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும். இதை, வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள, அலுவலர்களுக்கான கலந்தாய்வில் நடைமுறைப்படுத்தினால், பணிகள் விரைந்து முடிக்க, உதவியாக இருக்கும்,’என்றனர்.

    No comments: