Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 16, 2017

    ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம்: பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதேபோல் நடப்பு கணக்கில் வாரம் ரூ.1 லட்சம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடந்த நவம்பர் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

    இந்நிலையில் தற்போது இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது ரூ.4,500 எடுக்கலாம் என்ற வரம்பை ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வாரத்துக்கு மொத்தம் ரூ.24,000 தான் எடுக்கலாம் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்படவில்லை. இதேபோல் நடப்பு கணக்கில் வாரம் ரூ.1 லட்சம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்பு நடப்பு கணக்கை பொறுத்தவரை ரூ.50,000 எடுக்கலாம் என்ற வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    No comments: