Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 9, 2015

    வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.


     இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலர் என்.பசுபதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     தமிழகத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக தலைநகர் சென்னை உள்ளிட்ட சில கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பேரிடரால் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநில அரசுடன் இணைந்து அவர்களுக்கு துணையாகப் பணியாற்ற எங்களது சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், அரசுக்கு உதவும் வகையில் சங்க உறுப்பினர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்றுள்ள, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் சுமார் ரூ. 1 கோடியை நிவாரண நிதியாக வழங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

    No comments: