Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 16, 2015

    பள்ளி லேப்-டாப் திருட்டு ஆறு மாணவர்கள் கைது

    அரசு பள்ளியில், லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் திருடிய, ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவருக்கு, கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 166 லேப்-டாப்கள், கணினி அறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம், 13ம் தேதி இரவு, அறையின் பூட்டை உடைத்து, 23 லேப்-டாப்களை, யாரோ திருடிச் சென்று விட்டனர். 


    போலீசார் வழக்குப் பதிவுஇதுகுறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும், ஆறு மாணவர்களை, சந்தேகத்தின் படி, போலீசார் விசாரித்தனர்; லேப்-டாப் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    கைதான அந்த மாணவர்களிடம், போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், அவர்களில் மூன்று மாணவர்களுக்கு கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    கல்லை போட்டு கொலை மே 29ல், வேலுார் மாவட்டம், கட்டாயம்பட்டு அருகே, சரவணன், 40, என்பவர், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து, 15 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில், மூன்று மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, போலீசார் கூறுகின்றனர். 

    கைதான மாணவர்களில், ஐந்து பேர், பிளஸ் 1 மற்றும் ஒருவர், பிளஸ் 2 படிக்கிறார். கொலை வழக்கில் சிக்கிய மூவரில், இருவர் பிளஸ் 1 படிக்கின்றனர்.

    No comments: