Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 20, 2015

    16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


    * கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு எம்.எஸ்.முத்துசாமி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு

    வாரியத்தின் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வந்த பி.சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு போலீஸ்

    அகாடமியின் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகிப்பார்.

    * தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் போலீஸ் சூப்பிரண்டாக இதுநாள் வரை இருந்து வந்த ஆர்.லலிதா லட்சுமி, இனி மத்திய

    சி.பி.சி.ஐ.டி. துணை கமிஷனராக பதவி வகிப்பார்.

    * மத்திய சி.பி.சி.ஐ.டி. துணை கமிஷனராக பதவி வகித்து வந்த எஸ்.செல்வக்குமார், இனி வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக

    பதவி வகிப்பார்.

    * கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு பி.மகேந்திரன், இனி ஆவடி பட்டாலியன் (ரெஜிமெண்டல் சென்டர்)

    கமாண்டராக பதவி வகிப்பார்.

    * ஆவடி பட்டாலியன் (ரெஜிமெண்டல் சென்டர்) கமாண்டராக இதுநாள் வரை பதவி வகித்த ஏ.ராதிகா, இனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

    சூப்பிரண்டாக பதவி வகிப்பார்.

    * சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பி.பெருமாள், இனி திருவல்லிக்கேணி துணை கமிஷனராக பதவி வகிப்பார்.

    * திருவல்லிக்கேணி துணை கமிஷனராக இருந்த அனில் குமார் கிரி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

    * அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு இருக்கிறார்.

    * சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்த எம்.துரை, சென்னை போக்குவரத்து (கிழக்கு) துணை கமிஷனராக

    நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    * சென்னை போக்குவரத்து (கிழக்கு) துணை கமிஷனராக இருந்து வந்த எஸ்.ராஜேந்திரன், மாதவரம் துணை கமிஷனராக மாற்றப்பட்டு

    உள்ளார்.

    * மாதவரம் துணை கமிஷனராக இருந்த எஸ்.விமலா, சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனராக இனி பணியில் தொடருவார்.

    * புளியந்தோப்பு துணை கமிஷனர் ஆர்.சுதாகர், அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

    * அம்பத்தூர் துணை கமிஷனராக இருந்து வந்த ஏ.மயில்வாகனன், புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    * சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆர்.சிவக்குமார், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை

    கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    * கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக இருந்த டி.கே.ராஜசேகரன், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை

    கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: