Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 6, 2015

    அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி: தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி

    அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


    அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள், வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் நியமிக்கப்பட்டனர். இதற்குப் பிறகும் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    மாற்றுப்பணி:

    ஒரு பள்ளியின் ஆசிரியர், வாரத்திற்கு மூன்று நாட்கள் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்தான்.இதனால், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்கும் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் என ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம். மற்ற மாவட்டங்களிலும் ஏறக்குறைய இதே நிலைதான். அங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அருகில் உள்ள பள்ளிகளில் இருந்தும் மாற்றுப்பணிக்காக, வாரத்தில் மூன்று நாட்கள் ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களையும் இப்பணியிடங்களில் நிரப்ப அரசுதான் முடிவு செய்ய வேண்டும், என்றார்.

    No comments: