Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 1, 2015

    கல்லூரி கல்வி இயக்குனராகமீண்டும் கூடுதல் பொறுப்பு

    கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கான நியமனத்தில், சில ஆண்டுகளாக தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன.


    கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கல்லுாரி கல்வி இயக்குனராக, செய்யாறு கலைக் கல்லுாரி முதல்வர் தேவதாஸ், கூடுதல் பொறுப்பில் பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன், அவருக்கே தெரியாமல், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் பேராசிரியர் சேகரை, கல்லுாரி கல்வி இயக்குனராக, உயர்கல்வித் துறை செயலகம் நியமித்தது.
    இதை எதிர்த்து, தேவதாஸ் வழக்கு தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் பொறுப்பை பெற்றார்; தேவதாஸ் நேற்று ஓய்வு பெற்றார்.இதையடுத்து, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பையும் கவனிக்க, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
    இதுகுறித்து, கல்லுாரி கல்வி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் சிவராமன் கூறும் போது, ''கூடுதல் பொறுப்பிலேயே இயக்குனர் நியமிக்கப்படுவதால், நிர்வாக பணிகளில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காலியிடங்களை நிரப்பவில்லை. பேராசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தவில்லை,'' என்றார்.

    No comments: