Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 17, 2015

    இளைஞர் எழுச்சி தின அறிவியல் போட்டியில் வினிதா முதலிடம்

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, நடந்த இளைஞர் எழுச்சிதின அறிவியல் செய்முறை போட்டியில், பெரியகுளம் அரசு பள்ளி மாணவி வினிதா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் 9 ம் வகுப்பு மாணவி ஆர்.வினிதா.
    இவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினமான இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வாரியாக நடந்த 'அறிவியல் செய்முறை' போட்டியில் பங்கேற்றார். தேனி மாவட்டத்தில் அக்.,13 ல் நடந்த இப்போட்டியில், 50 க்கும் அதிகமான பள்ளிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் வினிதா உட்பட 3 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த மாநில போட்டியில் வினிதா பங்கேற்றார். அதில், அவர் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றி முதலிடம் பெற்றார். அவரை பாராட்டி கல்வித்துறை அமைச்சர் வீரமணி கேடயம் வழங்கினார்.
    மாணவி வினிதா கூறுகையில், “பள்ளியில் தினமும் காலையில் 'தினமலர்' நாளிதழில் வரும் முக்கிய செய்திகளை குறித்துக்கொண்டு வந்து இறை வணக்கம் முடிந்ததும் வாசிப்பேன். குறிப்பாக, தினமலர் நாளிதழில் வரும் அறிவியல் கட்டுரைகளை வாசித்து, மனதில் பதியம் போட்டேன். இது அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற உதவியாக இருந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வி, உதவி தலைமையாசிரியை பாலநந்தினி ஆகியோர் ஒத்துழைப்பால், இந்த விருது எனக்கு கிடைத்தது. இந்த சாதனையை எனது தந்தை ராஜா, தாய் தாயம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்,” என்றார்.

    No comments: