Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 14, 2015

    நிதித்துறை கடிதம் 55891/Paycell /2015-1 Date: 08.10.15 பற்றிய ஓர் பார்வை.

    நிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பான கடிதம் 55891/Paycell /2015-1, Date: 08.10.2015ல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தில் பத்தி 4 - ன் இறுதியில் for examining pay anomalies in the ensuing pay commission / committee என்று உள்ளது. (ensuing என்ற வார்த்தைக்கு வருகிற, வரப்போகிற என்ற பொருள் அகராதியில் உள்ளது.

    ஆசிரியர்கள் போராடி வருகிற இந்நாட்களில், இயக்குனர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் அடுத்த ஊதிய குழுவில் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படும் என்று கூறப்பட்ட தகவல் அனைவரும் அறிந்ததே.

    இவ்வாறுள்ள நிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்த நாளன்று வெளியிடப்பட்டுள்ள நிதித்துறை கடிதத்தில் வருகிற (ensuing) pay commission /committee - யில் ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்ய (for examining pay anomalies) பணிநிலை சார்ந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    வருகிற ஊதிய குழுவிலே ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்ய இவ்வாறாக தகவல் கோருவதன் மூலம், தற்போது ஊதிய முரண்பாடுகள் களையப்படாது என்று தெரிவிப்பதாகவே உள்ளது நிதித்துறையின் கடிதம்.

    பத்தி 4 - ன் துவக்கத்தில் தனிநபர் /சங்கங்கள் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ள போது seeking further pay revision citing the parity in the earlier pay revisions என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    முந்தைய ஊதிய திருத்தங்களில் ( earlier pay commissions ) இருந்த ஒற்றுமையை குறிப்பிட்டு ( citing the parity ) ஊதிய திருத்தம் ( further pay revisions ) கோரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கடிதத்தில் நிதித்துறையே குறிப்பிட்டுள்ளதன் மூலம் முந்தைய ஊதிய குழுக்களில் parity - ஒற்றுமை காணப்பட்டதை நிதித்துறை ஏற்றுக்கொள்வதாகவே பொருள் கொள்ளலாம்.

    ஆனால் ஆறாவது ஊதியகுழுவில் Diploma படித்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் Diploma கல்வித்தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படாததோடு மட்டுமல்லாமல் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான கல்வித்தகுதி S.S.L.C. மற்றும் Certificate course என்று தவறான தகவல் குறிப்பிட்டு ஆசிரியர்கள் கொச்சைப்படுத்தப்பட்டது இந்த இடத்தில் உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகிறது.

    ஊதிய முரண்பாடுகளுக்கு போராடி வருகிற நிலையுடன், தற்போது நிதித்துறை மூலம் பணிசார்ந்த தகவல் கோரப்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் அனைத்து நிலை ஆசிரியர்களின் duties and responsibilities உள்ளிட்ட கோரப்பட்டுள்ள அனைத்து தகவல்களை சரியாக முழுமையாக நிதித்துறைக்கு, கல்வித்துறை வழங்கிட, ஆசிரியர் சங்கங்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    சிறிய சங்கம், பெரிய சங்கம் என்ற வேறுபாடுகளை மறந்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையால் உயர்வை அடைய அனைவரும் முன்வர வேண்டும். நம்மிடையே உள்ள வேறுபாடுகளை களைவோம், ஊதிய முரண்பாடுகளை களையும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.
    திரு. தாமஸ் ராக்லேண்ட், துணை பொது செயலாளர், திருச்சி

    No comments: