Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 4, 2015

    கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள் சம்பளம் இன்றி 5 மாதமாக தவிப்பு

    கடந்த ஐந்து மாதமாக, சம்பளம் வழங்கப்படாததால், பெரம்பலுார் மாவட்ட கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள், 120 பேர் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 2010 ஏப்ரல் 7ம் தேதி, 'கற்கும் பாரதம் திட்டம்' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு நிதியுதவியுடன் மாநில அரசால் துவங்கப்பட்டது. 


    தமிழகத்தில், முதல் கட்டமாக, 50 சதவீதத்துக்கும் குறைவாக எழுத்தறிவு உள்ள மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலுார், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கற்கும் பாரதம் திட்டம் துவங்கப்பட்டது. ஏற்கனவே வளர்கல்வி திட்டத்தில் பணியாற்றிய, 4,408 பேர் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, கற்கும் பாரதம் திட்டத்தில் ஊக்குனர், உதவியாளர், மைய பொறுப்பாளர் பணியிடத்தில் பணியமர்த்தப்பட்டனர். 
    இதன் ஒரு பகுதியாக பெரம்பலுார் மாவட்டத்தில், 120 பேர் இத்திட்டத்தின்கீழ் மைய பொறுப்பாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்கள் கிராமங்களில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுத்து வந்தனர். இவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் சம்பளமாக 
    வழங்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பலுார் மாவட்டத்தில் பணியாற்றும் கற்கும் பாரதம் திட்ட மைய பொறுப்பாளர்கள், 120 பேருக்கு கடந்த மே முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், இத்திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு 
    வருகின்றனர். 

    No comments: