Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 19, 2015

    அதிக மார்க் வாங்க ரூ.2.50 போதும்! ஆர்.எம்.எஸ்.ஏ., வினோத முடிவு

    சிறப்பு பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு, பயணச்செலவாக ஒரு நாளைக்கு ரூ.2.50 மட்டுமே ஒதுக்கி, அதிர்ச்சி தந்துள்ளது ஆர்.எம்.எஸ்.ஏ., பொதுத் தேர்வில் மாநில அளவில், மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டம்தோறும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்) சிறப்பு பயிற்சி தருகிறது. கடந்த தேர்வில், 450 முதல், 470 மதிப்பெண் வரை பெற்றுள்ள மாணவ, மாணவியரை சனி மற்றும் விடுமுறை தினங்களில் வரவழைத்து, காலை முதல் மாலை வரை சிறப்பு பயிற்சி அளிப்பதே திட்டம்.


    இதற்காக, மாவட்டம் வாரியாக சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு, பள்ளிகள் வாரியாக படிப்பில் சிறந்த, 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுத்தேர்வு வரை, 50 நாட்களுக்கு இப்பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து செலவாக, 100 ரூபாய், சிற்றுண்டி செலவாக, 25 ரூபாய் என மொத்தம், 125 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, 50 நாட்களுக்கு தினமும் பயண செலவாக இரண்டு ரூபாய், சிற்றுண்டி செலவாக, 50 காசு ஒதுக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு பஸ்கள் மாறி, பயிற்சி மையத்துக்கு மாணவ, மாணவியர் வர வேண்டும். மாலை வரை பயிற்சி அளிப்பதால், சிற்றுண்டி வழங்குவது அவசியம். 50 நாட்களுக்கு, 125 ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது எதன் அடிப்படையில் என தெரியவில்லை.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பனிடம் கேட்ட போது, நிதி பற்றாக்குறையால், குறைந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், அடுத்த வாரம் சிறப்பு பயிற்சி துவங்கும். தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவியரின் சிரமம் போக்க, தாராபுரம், உடுமலை, திருப்பூர் என மூன்று இடங்களில், பயிற்சி மையம் அமைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம், என்றார்.

    No comments: