Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 16, 2015

    'கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'TNEA COUNSELLOR ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை

    பிளஸ் 2 முடிவு வெளியானதும், இன்ஜி., துறையில் கால்பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் இருக்கும், ஒரே தலைவலி 'கவுன்சிலிங்'.'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எந்த கோர்ஸ், எந்த காலேஜில் கிடைக்கும் என்பதை அறியவே, ஒரு மாதமாகிவிடும். ஆனால், கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, இதை ஒரு சில நொடிகளிலே தெரிவிக்கும் புதிய, 'ஸ்மார்ட்போன்' அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.


    வித்யா நிகேதன் பள்ளி மாணவியான பியோனா விக்டோரியா, பிளஸ் 2 முடித்து, தற்போது இன்ஜி., கவுன்சிலிங்குக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பா ஸ்டான்லி, அம்மாநிர்மலா, இருவரும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.தனது எட்டாம் வகுப்பு முதலே, புரோகிராமிங் குறித்த கோடை சிறப்பு வகுப்புக்கு சென்று வரும் இவர், இந்த அப்ளிகேஷனை, மூன்று மணி நேரத்திலேயே, டிசைன் செய்து அசத்தியுள்ளார்.'தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலர்' (TNEA COUNSELLOR) எனும் இந்த மொபைல் அப்ளிகேஷன், கட் ஆப் கால்குலேட்டர், கவுன்சிலர் தேர்வு, விருப்ப தேர்வு போன்ற பயன்பாடுகளுடன் 
    வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முதலில் மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடுகிறது. பின், கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ற பிரிவுகள், மாவட்ட முன்னுரிமை மற்றும் சமூக அடிப்படையில் எத்தனை கல்லுாரிகள், பரிந்துரைகள் உள்ளன என்பதை தெளிவாக காட்டுகிறது. இதில் துறை வாரியாக, 'கட் ஆப்' வாரியாக, மாவட்ட வாரியாக மற்றும் கல்லுாரி வாரியாக, பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் எங்கு, எப்படி, எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற யோசனைகளை முன்கூட்டியே பெறலாம். இதை மொபைல் மட்டுமின்றி, 'டேப்'களிலும், இணையதளம் வாயிலாகவும் பயன்படுத்தலாம்.

    இந்த அப்ளிகேஷன், அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் (வெர்சன் 4.2 அதற்கு மேல்) இலவசமாக கிடைக்கிறது. 'கூகுள் பிளே ஸ்டோர்' வாயிலாக, இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். மாணவி பியோனா விக்டோரியா கூறுகையில், ''சிறு வயதிலிருந்தே, 'சி புரோகிராமிங்' கற்பதில் ஆர்வம் அதிகம். பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்ததும் இந்த யோசனை வந்தது. ஆன்லைனில், எல்லா தகவலையும் சேகரித்தேன். வெறும் மூன்று மணி நேரத்தில், இந்த அப்ளிகேஷனை டிசைன் செய்து முடித்தேன்.''தேர்வு முடிவு வந்ததும், கட் ஆப் மதிப்பெண்ணுக்கு இன்ஜி., சீட் கிடைக்குமா என கவுன்சிலிங் வாயிலாக தெரியவே, எப்படியும் ஒரு மாதம் ஆகும். இந்த ஆப்ஸ், இதை முன்கூட்டியே சொல்லிவிடுவதால், பயனுள்ளதாக இருக்கும். கடந்த இரு வாரத்தில், ஆயிரக்கணக்கானோர், 'டவுண்லோடு' செய்துள்ளனர்,'' என, மகிழ்ச்சியுடன் கூறும், பியோனா விக்டோரியாவுக்கு எதிர்காலத்தில், சாப்ட்வேர் இன்ஜியரிங் துறையில் வெற்றிக்கொடி நாட்ட ஆசை! வாழ்த்துக்கள்!

    No comments: