Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 26, 2015

    பள்ளித் தலைமை ஆசிரியை மூளைச்சாவு: 6 உடலுறுப்புகள் தானம்

    மூளைச்சாவு அடைந்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையின் 6 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன.  சென்னை மேடவாக்கம் கங்கா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (56). இவர் சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.


    இவர் கடந்த 22-ஆம் தேதி தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதையடுத்து அவர் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் சிகிச்சையின்போது சுயநினைவை இழந்துவிட்ட அவர், மூளைச்சாவு அடைந்ததாக மே 23-ஆம் தேதி மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
     அவரது உடல் உறுப்புகளைத் தானமளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். அவரது இருதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் ஆகிய ஆறு உடலுறுப்புகளும் தானமாகப் பெறப்பட்டன.

    கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் அரசு மருத்துவமனைக்கும், கண்கள், இருதயம் ஆகிய உடலுறுப்புகள் சென்னையில் உள்ள பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமளிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    No comments: