Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 24, 2015

    1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியையே பள்ளியில் பதிவு செய்ய வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

    1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது, பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே பள்ளி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.


    மாணவர் சேர்க்கை 

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு, உடனுக்குடன் நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களை சேர்க்கும் பணியில் தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். 


    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. ஆனாலும் நகர்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மாறாக தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கே பெரும்பாலான பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

    இந்த நிலையில் இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 350 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    பிறந்த தேதி 

    மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் பள்ளிகளில், மாணவ-மாணவிகளின் பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே, பள்ளி பதிவேட்டிலும் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் போது, பிறப்பு சான்றிதழ் உள்ள மாணவ-மாணவிகளை மட்டுமே சேர்க்க வேண்டும். பள்ளி பதிவேடுகளில் மாணவர்களின் பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியையே பதிவு செய்ய வேண்டும். 

    தவிர்க்க வேண்டும் 

    சில இடங்களில் பிறப்பு சான்றிதழை சரிபார்க்காமலே, பெற்றோர்கள் கூறும் பிறந்த தேதியையே பதிவு செய்து மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தவிர்க்கப்பட வேண்டியது. இந்த ஆண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது, இந்த தவறுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இது உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக சரிபார்க்கப்படும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    No comments: