Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 24, 2015

    பொது சொத்து சேதப்படுத்தினால் 'பத்தாண்டு': விரைவில் வருகிறது புதுச்சட்டம்


    ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


    பொதுச் சொத்துகளை போராட்டக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற தேவையான இந்த சட்டம் குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசியல் தலைவர்கள் கைது, மரணம், அரசின் முடிவை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம், எதிர்க்கட்சிகளின் பேரணி போன்றவற்றின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவது வாடிக்கையாக மாறியுள்ளது. இதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் இடம், மத்திய அரசு கோரியது. அதன்படி, அரசுக்கு, நீதிபதி தாமஸ் அறிக்கை அளித்துள்ளார்.

    அதில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:
    *போராட்டத்தில் சேதமாகும் பொருட்கள் மற்றும் இடங்களின், அப்போதைய சந்தை மதிப்பை, போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். 
    * அதிக தொகை கொண்ட அபராதம் விதிக்க வேண்டும்.
    * பொதுச் சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம்.
    *போராட்டத்தை துாண்டி விட்டவர் அல்லது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது. அவர்களும் கைது செய்யப்படுவது, அவர்களுக்கும் அபராதம் விதிப்பது.
    இத்தகைய நடவடிக்கைகளால், பொதுச் சொத்துகளை காப்பாற்றலாம் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த பரிந்துரைகளை ஏற்கலாமா என்பது குறித்து பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், வரும், ஜூலை 20ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    No comments: