Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 26, 2015

    வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை

    'அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது' என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்:

    * வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர் சத்தும், உப்புச்சத்தும் குறையும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது. சத்துக்கள் குறையாமல் இருக்க, அதிக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்; அது, சுத்தமானதாக இருக்க வேண்டும்.
    * நீர் ஆகாரம், மோர், இளநீர் குடிப்பது நல்லது. வெள்ளரி, தர்பூசணி நல்லது. நாட்டு வெல்லம் கலந்த, நன்னாரி சர்பத், மாதுளம் சர்பத், எலுமிச்சை சாறு அடிக்கடி குடிக்கலாம்.
    * எலுமிச்சை சாறு தயாரிக்கும் போது, சிறிது இஞ்சி, நாட்டு வெல்லம் சேர்த்து தயாரித்து, பருகுவது நல்லது. உப்புச்சத்து மட்டுமின்றி, இரும்புச்சத்தும் கிடைப்பதால், உடலுக்கு நல்லது. இதே முறையில், கரும்பு சாறும் குடிக்கலாம்.
    * வெயில் அதிகமானதால், நீர் சுளுக்கு ஏற்படும்; சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்தில் வராமலும், ரத்தம் கலந்து சிவப்பு நிறத்திலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    * இரவில், புது பானையில், தண்ணீர் ஊற்றி, யானை நெருஞ்சி செடியை போட்டு வைத்து, அதிகாலையில் குடித்தால், இந்த நீர் சுளுக்கு வராது. அலட்சியம் காட்டினால், சிறுநீரில் கல் அடைப்பு ஏற்படும்; சிறுநீர் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
    * இறப்பு ஏன்?: உச்சக்கட்ட வெப்ப தாக்கத்தால், மூளை நரம்புகள் வெடித்து விடுவதால் (சன் ஸ்டிரோக்), உயிர் இழப்பு ஏற்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமல்ல; கோடையில் பகல் நேரத்தில், அனைவரும் வெயிலில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் குன்றியோர் அறவே வெளியில் செல்லக்கூடாது.
    * பணி நிமித்தமாகவோ, அவசரமாகவோ வெளியில் செல்ல நேர்ந்தால், தொப்பி, குடையுடன் செல்லுங்கள்; பருத்தி உடைகளை மட்டுமே அணியுங்கள். வெயிலில் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டாம்.
    * வெப்ப தாக்கத்தை, எளிதாக எதிர்கொள்ளலாம்; பாதிப்பின் பிடியில் இருந்து தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

    No comments: