Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 26, 2015

    அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு

    அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 

    இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரம்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.இது மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரப்படி மிக கூடுதல் என்றும், இதனுடன் நிதியுதவி பள்ளிகளுக்கான பிற செலவினங்களும் அதிகம் என்றும் அரசு கருதுகிறது.
    இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை தவிர்க்க தற்போது அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை மிகதுல்லியமாக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. எனவே, அரசு நிதியுதவி பள்ளிகளை நடத்தி வரும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமுதாய அமைப்புகள் அனைத்தும் தங்கள் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைதிரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு திரும்ப பெறும் ஆசிரியர்கள் காலியாக உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    No comments: