Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 16, 2015

    கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

    கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவதற்கு கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 


    கருணை பணி 

    சென்னை ஐகோர்ட்டில், வி.பாபு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘அரசு பணியில் இருந்து என் தந்தை இறந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வாகன பராமரிப்பு துறையில் கருணை அடிப்படையில் எனக்கு காவலாளி பணி 2008-ம் ஆண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேரும்போது, 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று இருந்தேன். எனவே, கல்வி தகுதியின் அடிப்படையில், எனக்கு இளநிலை உதவியாளர் பதவி வழங்கவேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை அவர் நிராகரித்து விட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்து, எனக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    ஏற்க முடியாது 

    அதேபோல, சி.ஆர்.முருகன் என்பவரும் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், ‘என் தந்தை பணியில் இருக்கும்போது மரணமடைந்ததை தொடர்ந்து, வேலூரில் உள்ள அரசு போக்குவரத்து பராமரிப்பு பணிமனையில் துப்புரவு பணியாளர் பணி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. நான் பணியில் சேரும்போது 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ளதால், எனக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

    இந்த மனுக்களையும் விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர்கள் இருவரும் கருணை அடிப்படையில் பணியில் சேரும்போது, முறையே காவலாளி, துப்புரவு பணியாளர் பணிகளை விரும்பி பெற்றதாகவும், இப்போது இளநிலை உதவியாளர் பணி கேட்பதை ஏற்க முடியாது என்று போக்குவரத்து துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    உரிமை உள்ளது 

    இந்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு கூறும் இந்த காரணத்தை ஏற்க முடியாது. விருப்பத்தின் அடிப்படையில் காவலாளியாகவும், துப்புரவு தொழிலாளியாகவும் பணியில் சேர்ந்து இருந்தாலும், கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளர் பணி பெற மனுதாரர்களுக்கு தகுதியும், உரிமையும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது, மனுதாரர்களை அப்பதவிக்கு நியமிக்கலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    No comments: