Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 13, 2014

    போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

    தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் நடத்திய, அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின், சம்பளம் பிடித்தம் செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோஜாக்), கடந்த, பிப்., 26 மற்றும் மார்ச் 6ம் தேதிகளில், அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    'இதில் ஈடுபட்டவர்களின், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்தது. தேர்தல் வருவதால், அரசு இந்த நடவடிக்கையை, 'வாபஸ்' பெறும் என, தொடக்க கல்வி ஆசிரியர்கள் நம்பினர். ஆனால், சம்பளம் பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை, தொடக்க கல்வி இயக்குனரகம் எடுத்து வருகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர், பணிபுரியும் ஒன்றியம், மாவட்டம், அவரது சம்பளத் தொகை, பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சான்றுகளை சமர்ப்பிக்க, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    No comments: