Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 3, 2014

    தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம்: மாணவர்கள் பாதிப்பு

    அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் செய்முறை தேர்வு மற்றும் பொதுத் தேர்விற்கு தயாராகும் நேரத்தில், "பணி நிரவல்" மூலம் பட்டதாரி ஆசிரியர்களை இடமாறுதல் செய்ததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.


    பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவுப்படி, அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சில அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள் இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

    இதன்படி, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் "பணி நிரவல்&' மூலம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு நேரத்தில் கூடுதல் ஆசிரியர்களை மாற்றியதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என, ஆசிரியர்கள் சங்கத்தினர், கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், "40:1 விகிதாச்சார அடிப்படையில், மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், செய்முறை, பொதுத் தேர்வு நேரத்தில் மாறுதல் செய்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேலாவது கல்வியாண்டின் துவக்கம் அல்லது தேர்வு விடுமுறை காலத்தில், "பணி நிரவல்" மாறுதல் செய்ய வேண்டும்" என்றனர்.

    No comments: