Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 20, 2014

    திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை; உயர் நீதிமன்றம் உத்தரவு

    திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும்  பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி கனிமொழி சென்னை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு படித்து  முடித்துவிட்டு 12ம் வகுப்பு படிக்காமல் டிகிரியை திறந்தவெளி  பல்கலைக்கழகத்தின் மூலம் படித்து முடித்தேன். பின்னர் பட்டமேற்  படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
    அதன்பிறகு முழு கல்வி தகுதி  பெற  பிளஸ் 2 தனியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். அதன்பிறகு  ஆசிரியர் தகுதி  தேர்வில் பங்கேற்று எழுத்து தேர்வில் வெற்றி பெற்றேன்.  ஆனால் எனக்கு ஆசிரியர் பணி வழங்க அரசு மறுத்து விட்டது.

    எனவே எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்  வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து,  மனுதாரர் உரிய கல்வித்தகுதி பெற்றுள்ளார். அவர் எப்படி படித்தார் என்று  கணக்கில் எடுத்துக்கொண்டது தவறானது. எனவே அவரது கல்வி  தகுதியை கருத்தில் கொண்டு பணி வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டார்.

    4 comments:

    VARUN PANDIAN said...

    Very good judgement.

    Anonymous said...

    How

    Anonymous said...

    How

    Anonymous said...

    How