Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 19, 2013

    பொறியியல் கலந்தாய்வு முடிவு வெளியிட தடை

    "அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவுக்கான முடிவை, வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் சரண்யா தாக்கல் செய்த மனு: நான் எறிபந்து விளையாட்டு போட்டியில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். இவ்விளையாட்டை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்துள்ளன. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன். விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில், 730 மதிப்பெண் என்ற தகுதியை எட்டியுள்ளேன்.

    சென்னை அண்ணா பல்கலையில், ஜூன் 14 ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. எனது உண்மை சான்றிதழ்களை சமர்ப்பித்தேன். ஆனால், பல்கலை, ஜூன் 16 ல், வெளியிட்ட விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், எனது பெயர் இல்லை. என்னை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கவும், புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.
    இவ்வாறு குறிப்பிட்டார்.

    நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சண்முக ராஜா சேதுபதி ஆஜரானார். பல்கலை வக்கீல், "மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் அங்கீகாரத்தை, இந்திய எறிபந்து கூட்டமைப்பு பெறவில்லை. இதனால், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை" என்றார்.

    நீதிபதி, "மனுதாரரை கவுன்சிலிங்கில் பங்கேற்க, பல்கலை அனுமதிக்க வேண்டும். மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விளையாட்டு பிரிவுக்கான கவுன்சிலிங் முடிவை வெளியிடாமல், நிறுத்தி வைக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

    No comments: