Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 19, 2013

    பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல் வெளியாவதில் கால தாமதம்

    பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியாவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்றோ அல்லது நாளையோ, பட்டியல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், "மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின், 2011-12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" என அண்ணா பல்கலைக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது.

    அண்ணா பல்கலையும், கல்லூரிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில், "ரேங்க்" பட்டியலாக வெளியிட நடவடிக்கை எடுத்தது. "17ம் தேதி(நேற்று) காலையில், கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்" என பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்திருந்தார்.

    ஆனால், நேற்றிரவு, 8:00 மணி வரை, பல்கலை இணையதளத்தில், "ரேங்க்" பட்டியல் வெளியாகவில்லை. ஐகோர்ட் உத்தரவு நகல், இன்னும் பல்கலைக்கு கிடைக்கவில்லை என்றும், உத்தரவு நகல் கிடைத்தபின், அதை ஆய்வு செய்த பிறகே, கல்லூரிகளின், "ரேங்க்" பட்டியல் வெளியிடப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஐகோர்ட் தீர்ப்பு குறித்து, சட்டத் துறையுடன், உயர்கல்வித் துறை, ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தேர்ச்சி சதவீத அடிப்படையில், பட்டியலை வெளியிடும்போது, அதனால், ஏதாவது பிரச்னைகள் வருமா, ஒரு ஆண்டுக்கான தேர்ச்சி சதவீத பட்டியலை மட்டும் வெளியிடலாமா, அல்லது இரண்டு, மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி சதவீத விவரங்களை வெளியிடலாமா என்பது குறித்து, உயர்கல்வித் துறை, ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே, "ரேங்க்" பட்டியல் வெளியாவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இன்றோ அல்லது நாளையோ, பட்டியல் வெளியாகலாம்.

    No comments: