சென்னை: மடிப்பாக்கம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவி மதுமிதா, 10ம் வகுப்பு தேர்வில் மாநில
அளவில் 3ம் இடம் பிடித்து உள்ளார். மாணவி
மதுமிதா, மொத்தம்
496 மதிப்பெண்கள் பெற்றார்.
தன் வெற்றி குறித்து அவர் கூறியதாவது: பள்ளியில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை குறிப்பெடுப்பேன். வீட்டில் தினமும் ஐந்து மணி நேரம்
படிப்பேன். தேர்வுக்கு நான்கு மாதங்களுக்கு முன் உடல் ஆரோக்கியத்திலும், கவனம் செலுத்தினேன்.
தன்னம்பிக்கையும்,
விடாமுயற்சியும், உடல் ஆரோக்கியமும் இருந்தால் வெற்றி பெறலாம். என் வெற்றிக்கு தலைமை ஆசிரியை ரஞ்சனி, வகுப்பு ஆசிரியை லலிதா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். சி.ஏ., படிக்க வேண்டும் என்பது
என் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment