Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 11, 2013

    பள்ளியில் சேர்க்க மறுப்பு: பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்

    சோமனூர், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 39; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 34, இவர்களுக்கு பிரவீன் சந்தர், 8, என்ற மகனும், தீப்தி 5, என்ற மகளும் உள்ளனர். மகன், சாமளாபுரத்தில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.
    அதே பள்ளியில், மகளை எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க விண்ணப்பம் கொடுத்துள்ளார். பள்ளியில் இடம் தராமல் இழுத்தடிப்பதாக கூறி, திருப்பூர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். அதன் பின் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மனைவி மற்றும் மகளுடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

    தெற்கு போலீசார், அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது, "முத்துக்குமாரின் மகளுக்கு அதே பள்ளியில் இடம் கிடைக்க, நிர்வாகத்திடம் பேசுவதாக கூறினோம்; போராட்டத்தை கைவிடுமாறு எழுதி கொடுங்கள் என்று கேட்டோம். பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று நிர்வாகம் கூறினால் தான், எழுதி தருவேன் என்று கூறுகிறார்" என்றார்.

    No comments: