தொடக்கக் கல்வியின் அடிப்படை தகவல்களை, பிழையுடன் எழுதி, "காசு'க்காக பொறுப்பின்றி அச்சிட்டு, விற்பனையில் "கல்லா' கட்டும் "டுபாகூர்' புத்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பெற்றோர், ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
துவக்க பள்ளிகளில், தமிழ் பாடத்தில் மாணவர்களுக்கு முதலில் கற்றுக்கொடுக்கும் பகுதி உயிரெழுத்துக்கள். இதன் பின் மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள். ஆங்கிலத்தில், பெரிய மற்றும் சிறிய வகை "ஏ, பி, சி, டி...' எழுத்துக்கள். கணிதப் பாடத்தில், வாய்ப்பாடுகள், சிறிய எண்களின் கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற கணக்கு வகைகள் தான். அடிப்படை கல்வியில் இது முக்கியமானது. அரசு வழங்கும் புத்தகங்களில் இதுதொடர்பான தகவல் இடம் பெற்றிருந்தாலும், வாய்ப்பாடு போன்ற ஒருசில பகுதிகள் இருப்பதில்லை. எனவே, ""ஓரெண்டு ரெண்டு...'' என "கோரசாக'வே பள்ளிகளில் இன்றும் கற்றுத்தரப்படுகின்றன. குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள், வாய்ப்பாடு, ஏ, பி, சி, டி... போன்ற அடிப்படை தகவல்கள் அடங்கிய சிறிய புத்தகங்களை விலைக்கு வாங்கி மனப்பாடம் செய்கின்றனர். பல்வேறு பெயர்களில், தனியாரால் கவர்ச்சிகரமாக அச்சிடப்பட்டு ரூ.3 முதல் ரூ.10 விலைக்கு இப்புத்தகங்கள் விற்பனையாகின்றன. இவை பொருள் தவறுகள், அச்சுப்பிழைகள் ... என்று "ஏனோதானோ' நிலையில் அச்சிடப்பட்டுள்ளன. வாய்ப்பாடுகளில் ஏராளமான அச்சுப் பிழைகள் உள்ளன. இதை படிக்கும் மாணவர்கள், தேர்வுகளிலும் தவறாக எழுதுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
மதுரை பள்ளி ஆசிரியை சுலேகாபானு கூறியதாவது: கடந்தாண்டு இறுதி தேர்வில், தமிழ் மற்றும் கணக்கு கூட்டல், கழித்தல் போன்ற வினாக்களுக்கு மாணவர்கள் ஒரே மாதிரி தவறாக எழுதினர். இதை விசாரித்தபோது, சில புத்தகங்களை படித்து எழுதியதாக கூறினர். அவற்றை வாங்கி படிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என்றார். மாணவர்களின் பிஞ்சு மனங்களில், பிழைகளை விதைக்கும் இதுபோன்ற புத்தகங்களை கண்டறிந்து, கல்வி அதிகாரிகள் தடை செய்யவேண்டும். புத்தகங்கள் தயாரிக்கும் போது, தனியாரும் பொறுப்போடு பிழைகள் இல்லாமல் அச்சிட வேண்டும்.
மதுரை பள்ளி ஆசிரியை சுலேகாபானு கூறியதாவது: கடந்தாண்டு இறுதி தேர்வில், தமிழ் மற்றும் கணக்கு கூட்டல், கழித்தல் போன்ற வினாக்களுக்கு மாணவர்கள் ஒரே மாதிரி தவறாக எழுதினர். இதை விசாரித்தபோது, சில புத்தகங்களை படித்து எழுதியதாக கூறினர். அவற்றை வாங்கி படிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என்றார். மாணவர்களின் பிஞ்சு மனங்களில், பிழைகளை விதைக்கும் இதுபோன்ற புத்தகங்களை கண்டறிந்து, கல்வி அதிகாரிகள் தடை செய்யவேண்டும். புத்தகங்கள் தயாரிக்கும் போது, தனியாரும் பொறுப்போடு பிழைகள் இல்லாமல் அச்சிட வேண்டும்.
No comments:
Post a Comment