Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 3, 2013

    ஆங்கில ஆய்வகம் திட்டம்.... மாதிரி பள்ளிகளுடன் முடக்கம்

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் பொருட்டு, துவங்கப்பட்ட ஆங்கில ஆய்வகம் திட்டம், கிடப்பில் போடப்பட்டதால், கிராமப்புற மாணவர்களின் வாசிப்பு திறனில், தொய்வு ஏற்பட்டுள்ளது.
    சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆங்கில ஆய்வகம் திட்டம் துவங்கப்பட்டது. ஒரு மாவட்டத்தில் முதல் கட்டமாக ஐந்து உயர்நிலை, ஐந்து மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு, பேச்சுத்திறனை வளர்ப்பது குறித்து, நடைமுறை செயல்விளக்கம் அளிக்கும் வகையில், ஆங்கில ஆய்வகம் என்ற பெயரில் திட்டம் துவங்கியது.

    இதற்காக ஒரு பள்ளிக்கு 10 முதல் 20 மாணவர்கள், ஒரு அறையில் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு மாணவருக்கும் ஹெட்போன், மைக், வழங்கப்பட்டது. இவை, ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் உரையாடுவது குறித்து பதிவு செய்யப்பட்ட கேசட் மூலம், ஒவ்வொரு மாணவர் ஹெட்போனிலும் ஒலிபரப்பப்படும்.

    இதில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, மைக்கில் கேட்டால், ஆசிரியர் உரிய விளக்கமளிப்பார். மேலும் உச்சரிப்பு, பேசுவது குறித்து ஆசிரியர் மைக்கில் விளக்கும்போது, அனைத்து மாணவர்களின் ஹெட்போனில் கேட்கும். ஆனால், மாணவர்களின் கேள்விகள், ஆசிரியருக்கு மட்டும் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

    முதல் கட்டமாக மாதிரி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆனால் மாதிரி பள்ளிகளுக்கு வழங்கிய உபகரணங்களே, இதுவரை சரியாக பயன்படுத்தப்படவில்லை. மற்றப்பள்ளிகளில் திட்டம் துவங்கப்படவே இல்லை.

    இதனால், கிராமப்புற மாணவர்களின், ஆங்கில உச்சரிப்பு மேம்பாடு கேள்வி குறியாகி விட்டது. இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆங்கில ஆய்வகம் திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருந்தது. ஆனால், முதல் கட்ட பயிற்சியுடன், நிறுத்திவிட்டனர்.

    தொடந்து செயல்படுவது குறித்து, தெளிவுபடுத்தவில்லை. மேலும், சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஈடுபாடு காட்டாததால், தற்போது இத்திட்டத்திற்கான, உபகரணங்கள் பயன்பாடின்றி உள்ளது, என்றார்.

    No comments: