Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 17, 2013

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பேரணி

    22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கரூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்த தொடங்கிய பேரணிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி அமைப்பாளர் நன்செய் புகழூர் அழகரசன் மாநில பார்வையாளராக கலந்து கொண்டார்.
    பேரணியில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 80 சத அகவிலைப் படியில், 50 சதத்தை அகவிலை ஊதியமாக அறிவிக்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து 2003-முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு கால வாழ்வாதாரமாக விளங்கிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும், பணியில் சேர்ந்த நாள் முதலே காலமுறை ஊதியம் வழங்குவதோடு, மொத்த பணிக்காலத்தையும் கால முறை ஊதியம் பெற்ற கணக்கில் சேர்க்க வேண்டும்.

    ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களுக்கு தொழிற்சங்க உரிமையை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை புகுத்துவதைக் கைவிட்டு, நடைமுறையிலுள்ள தமிழ் வழிக் கல்வியை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    No comments: