Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 7, 2013

    தனியார் பள்ளிகளில் அரசு கட்டணம் வசூலிக்க கோரிக்கை

    தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயத்த கட்டணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.
    சிதம்பரம் நகர மா.கம்யூ., நகர்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் 2013-14ம் கல்வியாண்டில் தனியார் மெட்ரிக் முறை ஆங்கில பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மாணவர்கள் இடத்தில் பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.அரசு ஒதுக்கீடு 25 சதவீதம் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு போல் இல்லாமல், இந்த ஆண்டு முழுவதுமாக மெட்ரிக் பள்ளிகள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments: