Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 20, 2013

    மருத்துவக் கலந்தாய்வு: சென்னை மருத்துவ கல்லூரிக்கு மவுசு

    மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க, சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்.எம்.சி.,) தேர்வு செய்தனர்.
    தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது.

    முதல் நாள் நடந்த, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முறையே, 44, 3, 2 என, மொத்தம், 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வழங்கப்பட்டன.

    மீதியுள்ள, 1,774 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும், 85 பி.டி.எஸ்., இடங்களுக்கான, பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்தோர், எம்.பி.பி.எஸ்., படிக்க, எம்.எம்.சி., கல்லூரியை தேர்வு செய்தனர்.

    இதன் பின், முதல்கட்ட கலந்தாய்வு, வரும், 22ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க, "கட்-ஆப்" மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில், ஒரு நாளுக்கு சராசரியாக, 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

    தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 909 பி.டி.எஸ்., இடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்த்தப்பட்டுள்ள, 185 எம்.பி.பி.எஸ்., இடங்கள், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், ஜூலை, இரண்டாம் வாரம் துவங்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.

    No comments: